ஜனாதிபதி வேட்பாளரை மகிந்தவே தெரிவுசெய்வார்-கோத்தபாய

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான நபரை மகிந்தராஜபக்ச தெரிவு செய்வார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் சரியாக புரிந்துகொள்ளக்கூடிய தலைவர் என்ற வகையில் பொருத்தமான வேட்பாளரை மகிந்த ராஜபக்ச தெரிவு செய்வார் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொதுமக்கள் மகிந்தராஜபக்சவின் பக்கமே உள்ளனர் முன்னர் அவரை தோற்கடித்த சக்திகளும் தங்கள் தவறை உணர்ந்துள்ளன என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச பொருத்தமான தருணத்தில் சரியான முடிவை எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!