அட்மிரலாகப் பதவி உயர்த்தப்பட்டார் கடற்படைத் தளபதி!

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஜனாதிபதியினால் இன்று முதல் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்று கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையிலேயே அவர் அட்மிரலாக பதவி உயர்ததப்பட்டுள்ளார்.

அதேவேளை,கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!