யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று 125 பேருக்கான பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலையிலும், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!