கலவானவில் நடமாடிய கொரோனா தொற்றாளர்! – 300 கடைகள் மூடப்பட்டன.

கலவான பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, அங்குள்ள 300 கடைகள் நேற்று நண்பகலுடன் மூடப்பட்டுள்ளன.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும், கலவான பகுதியைச் சேர்ந்த ஆலோசகர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கந்தகாடு நிலையத்தில் இருந்து கலவானவுக்கு சென்றிருந்த அவர், கடைகள், வங்கி, மருந்தகம் மற்றும் பல வீடுகளுக்கும் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கலவான பகுதியில் உள்ள 300 கடைகள் நேற்று நண்பகலுடன் மூடப்பட்டன.

அதேவேளை, தொற்றாளர் சென்ற இடங்களில் உள்ளவர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தொற்றாளரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!