அங்கொடை லொக்காவை விஷம் வைத்து கொன்றார் சகாவின் மனைவி!

பாதாள உலக குழுத் தலைவரான சந்தன லசந்த பெரேரா எனும் “அங்கொடை லொக்கா” இந்தியாவில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளார். பெங்களூரில் லொக்காவுடன் வசித்து வந்த முல்லேரியா ரத்தரனின் மனைவியே, உணவில் விஷம் கலந்து லொக்காவை கொன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முல்லேரியா ரத்தரனின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அங்கொட லொக்காவின் சடலம் கோயம்புத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனை அவரது சகோதரி வீடியோ அழைப்பில் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கொட லொக்காவுக்கு பல்வேறு போதைப் பொருள் கடத்தல்கள், கொலைகள் மற்றும் சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களில் தொடர்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!