கொரோனா தொற்றாளர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை தப்பி சென்றுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருளுக்கு அடிமையான குறித்த நபர், பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் என்றும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு தொற்று ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எல்.சியாம் நசீம் என்ற 41 வயதுடைய இந்த நபர் திருகோணமலையை சேர்ந்தவராவார். சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் 119 என்ற இலக்கத்திற்கு அல்லது 071 – 8 591 017, 071- 8 592 290, 071 – 8 591 864 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த நபரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!