வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா?

முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.பொதுத்தேர்தலினை தொடர்ந்து குறித்த நியமனம் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்னி ஆயுதப்படைகளின் கட்டளை தளபதியாகவும், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான அதிகாரியாகவும் மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!