விக்னேஸ்வரனிடம் சிஐடி விசாரணை!

??????????????????????????????????????????????????????????
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் உயர் பொலிஸ் சி.ஐ.டி குழுவொன்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள உயர் அதிகாரிகளின் உத்தரவையடுத்தே இந்த விசாரணை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சரின் இல்லத்துக்கு இன்று (24) காலை திடீரெனச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தலைமையிலான சி.ஐ.டி குழுவினரே இந்த விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதலமைச்சரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று தொடர்பாகவே இதன்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!