மூன்று வகுப்புகளுக்கு இன்று பாடசாலை ஆரம்பம்!- விளையாட்டுகளுக்கு தடை.

தரம் 11,12 மற்றும் 13 மாணவர்களுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளன. 11,12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் மட்டுமே இன்று பாடசாலைகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், மறு அறிவித்தல் வரை பாடசாலைகளில் நிகழ்வுகள், விளையாட்டு மற்றும் பயிற்சிகளுக்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அபாயங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார். எனினும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாதவிளையாட்டு மற்றும் பயிற்சிகள் தொடங்கப்படலாம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!