அநுர உள்ளிட்ட மூவரை விசாரணைக்கு அழைக்க மாட்டோம் – மன்றுக்கு அறிவிப்பு!

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தம்மை ஆஜராகுமாறு அழைப்பதற்கு எதிராக அநுரகுமார திஸாநாயக்க, ஷானி அபேசேகர மற்றும் ஜனக பண்டார ஆகியோர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணைகள் முடிவுறும் வரையில் குறித்த மூவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைக்க மாட்டோம் என்று குறித்த ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!