துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதன்படி 6 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் மூவரை தெரிவு செய்து ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும். இதற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேரவையில் உள்ளோர் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்காக மதிப்பீட்டாளர்கள் என நால்வர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து வருகை தர உள்ளனர் .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!