முன்னணி வேட்பாளருக்கு ஆயுத முனையில் அச்சுறுத்தல்!

கிழக்கு மாகாணத்தில் தமது கட்சி வேட்பாளருக்கு ஆயுதமுனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்களின் முன்னணி தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகவேண்டும் என ஆயுதமேந்திய நபர்கள் எச்சரித்துள்ளனர் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது. குறிப்பிட்ட வேட்பாளரின் தந்தையை ஆயுதமுனையில் அச்சுறுத்தியுள்ள நபர்கள், மகனை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகச் சொல்லுங்கள் விலகாவிட்டால் கடத்துவோம் என எச்சரித்துள்ளனர் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!