ஞாயிறு நள்ளிரவுடன் பிரசாரங்கள் நிறைவு!

பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்கள் அனைத்தும் வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்னதாக எந்தவொரு பிரசார நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரங்களுக்கான கால எல்லை முடிந்த பின்னர், வரும் வரும் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களிலும், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!