சலுகைகளுக்கு அடிபணியாத தலைமைத்துவத்தை வழங்கத் தயார்!

??????????????????????????????????????????????????????????
இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழல் அற்ற, கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவமே இன்று அவசியம் எனவும் அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இதற்கான அதிகாரத்தையும், ஆணையையும், ஆதரவையும் இந்த தேர்தலின் ஊடாக வழங்கி தமது அரசியலின் பங்காளிகளாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தவகையில், வடக்கு- கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் தனது தலைமையிலான கூட்டணியை அமோக வெற்றியடையச் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் (ஞாயிறுக்கிழமை) மாலை நடைபெற்ற இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!