கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சின் தலைவரும் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

சற்றுமுன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு கொழும்பு மாவட்டத்தில் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் வாக்களிப்பு இடம்பெற்று வருவதுடன் அங்கு காலை 10 மணிவரையான காலப்பகுதியில் 34 வீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!