தேர்தலில் தோற்றவர்களுக்கு தேசிய பட்டியல் கிடையாது – சஜித்

தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளிக்கப்படாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (08) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“நாடாளுமன்றில் 54 ஆசனங்களை பெற்றுக் கொடுத்த 27 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

தேர்தலில் பின்னடவை சந்தித்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்க போதவதில்லை என கட்சியின் கொள்கை பிரகடனத்தில் முன்னரே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளது. எனவே தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளிக்கப்படாது.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!