கோவிட்-19: தமிழகத்தில் ஒரேநாளில் 5,834 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 5,834 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 5,814 பேர் அடையாளம் கண்பட்டுள்ளதுடன் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த 20 பேர் அடங்குவதாகவும் சுகாதார துறை அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 8 ஆயிரத்து 649 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை சென்னையில் 5-வது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் குறைவாக 986 பேருக்கு லபற்பமா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 118 பேர்உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,159 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று மட்டும் 6,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இதுவரை மொத்தம் 2,50,680 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!