ஐ.தே.கட்சியுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த தயார்- ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவிக்கும் போது, எதிர்வரும் 20ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடியதன் பின்னர் குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சியானது அதற்கு சாதகமான சூழலை அமைக்க வேண்டியது அவசியமெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தொடர்பிலும் தேசிய பட்டியல் வேட்பாளர் தொடர்பிலுமான இறுதித் தீர்மானம் ஒன்று மேற்கொள்வதற்காக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!