பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வைத்திருக்க தடையில்லை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சை தம் வசம் வைத்திருக்க எந்த தடையும் இல்லை என்று அரசியலமைப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தனது கருத்துக்களை தெரிவித்த அரசியலமைப்பு விவகார நிபுணர் மனோகர டி சில்வா, பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்த வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவர் என்றும் எனவே, ஜனாதிபதியால் அந்த இலாகாவை வைத்திருக்க முடியாது என்று சொல்வது முட்டாள்தனமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!