10 மணி உத்தரவால் குழம்ப வேண்டாம்

வடக்கு மாகாணத்தில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் திறக்குமாறு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் குழப்பமடைய தேவையில்லை என்று யாழ்ப்பாண வணிகர் சங்க உபதலைவர் ஆர். ஜெயசேகரன் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் முகமாகவும் நாட்டை மீள வழமைக்கு கொண்டு வருவதற்குமே, இந்த அறிவுறுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளதெனவும், இந்த அறிவுறுத்தல் இலங்கையின் சகல பாகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதெனவும், அவர் கூறினார்.

உங்களால் இயலுமாக இருந்தால், இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!