கட்சி தலைமைத்துவத்தை ஏற்று கட்டியெழுப்ப நான் தயார்-ருவான் விஜேவர்தன

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுபேற்று கட்சியை மீண்டும் வெற்றி பெற செய்ய தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அனைவரது ஒத்துழைப்பும் கிடைத்தால், கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல தயார். கட்சியின் செயற்குழு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் கருத்துக்களை பெற்று கட்சியை கட்டியெழுப்பு முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எனக்கு வழங்கினாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கட்சியில் பதவி ஒன்றை பெற்று கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் உதவ வேண்டும் என்பது எனது நோக்கம் எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!