மன அழுத்தம் காரணமாக வடகொரிய தலைவர் கிம் செய்த செயல்: பேரழிவு காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மன அழுத்தம் காரணமாக தமது சகோதரியிடம் பொறுப்புகள் சிலவற்றை ஒப்படைத்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து தற்போது அவர் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. கிம் ஜாங்கின் தற்போதைய நிலை மேலும் நீடித்தால் அது வடகொரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என முன்னாள் தென் கொரிய ஜனாதிபதியின் ஆலோசகர் சாங் ஸோங் மின் வெளிப்படுத்தியுள்ளார்.

தமக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், கிம் ஜாங் உன் கோமா நிலையில் தான் இருக்கிறார், ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருக்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்கிறார். மொத்தமாக ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கும் ஒரு தெளிவான திட்டத்தை இதுவரை வடகொரியா உருவாக்கவில்லை என குறிப்பிட்டுள்ள ஒரு பிரித்தானிய பத்திரிகை, ஆட்சியில் வெற்றிடம் தென்பட கூடாது என்பதாலையே, அவரது சகோதரி கிம் யொ ஜாங் பொறுபுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார் என அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னரே, கிம் ஜாங் தமது பொறுப்புகளில் சிலவற்றை சகோதரிக்கு பகிர்ந்து அளித்ததுடன், மன அழுத்தம் காரணமாகவே இந்த பொறுப்பு ஒப்படைப்பு நடந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 36 வயதான கிம் ஜாங், இந்த ஆண்டில் இதுவரை சில முறை மட்டுமே, வெளியே ஊடகங்கள் முன்னிலையில் தென்பட்டார்.

இதனால் கிம் ஜாங் மரணமடைந்துவிட்டார் என்பது போன்ற தகவலும், அவருக்கு மேற்கொண்ட இருதய அறுவைசிகிச்சை சிக்கலில் முடிந்தது எனவும் தகவல் பரப்பப்பட்டது. ஆனால், தலைநகரில் இருந்து சுமார் 30 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள சூச்சோன் பகுதியில் கிம் ஜாங் ஒரு தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு மொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!