ரஞ்சனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நிறைவு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றுடன் (25) நிறைவுக்கு வந்துள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனினும் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பிற்கு முன்பாக மேலதிக கருத்துக்களை ஒக்டோபர் மாதம் 21ம் திகதி தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த, நீதிபதிகள் குழுவின் அமர்வு தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!