இந்தியாவுக்கான தூதுவராக மிலிந்த மொறகொட!

இந்தியாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட நியமிக்கப்படவுள்ளார். அமைச்சரவை அமைச்சருக்குரிய அதிகாரங்களுடன், மிலிந்த மொறகொடவை இந்தியாவுக்கான தூதுவராக நியமிப்பதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான தூதுவராக மிலிந்த மொறகொடவை நியமிப்பதற்கான பரிந்துரை, உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!