ஒரு மணித்தியாலத்தில் சத்திய பிரமாணத்தை மீறிவிட்டார் சி.வி!

சி.வி. விக்னேஸ்வரனை உடனடியாக சபையிலிருந்து தூக்கி வெளியே போட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

”நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்படமாட்டேன். பிரிவினைக்கு, பயங்கரவாதத்துக்கு ஒத்துழைக்கமாட்டேன் என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து ஒரு மணித்தியாலத்தினுள்ளேயே சி.வி. விக்னேஸ்வரன் அதனை மீறி விட்டார். எனவே அவரை உடனடியாக சபையிலிருந்து தூக்கி வெளியே போட வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!