மட்டக்களப்பில் பஸ் மோதி இரு இளைஞர்கள் பலி!

மட்டக்களப்பு- தாழங்குடாவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் புதுக்குடியிருப்பு கந்தசாமி ஆலய வீதியை சேர்ந்த 24 வயதுடைய துலக்ஸன் மற்றும் 20 வயதுடைய நிலுக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தினை தொடர்ந்து பொதுமக்களினால் பஸ் தாக்கப்பட்டுள்ளதுடன் பஸ் சாரதியும் நடத்துனரும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!