“20”இற்கு எதிராக ஏனைய கட்சிகளுடன் இணைகிறது கூட்டமைப்பு!

20 ஆவது திருத்தச் சட்ட வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்ப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளை தடுப்பதற்கான போராட்டத்தில், ஏனைய கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்தை சுருக்கி விடும் என்றும் குறிப்பிட்டுள்ள இரா.சம்பந்தன், இந்த திருத்த வரைவுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி கலந்துரையாடி முடிவுகளை எடுக்கும் என்றும், தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!