இப்போது ஆட்சிக்கு வந்திருப்பது புதிய அரசு கிடையாது – அநுர

மோசடி செய்பவர்களையும் குற்றவாளிகளையும் தண்டிக்கும் அதிகாரம் தனக்கு இருந்தால், இன்று ஆளும் கட்சியில் பலர் இருக்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (08) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மோசடி செய்பவர்கள் யாரும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார்கள். அணிந்திருக்கும் ஆடை வெள்ளையாக இருந்தாலும் அவர்களது உள்ளங்கள் கருமையாகதான் காணப்படுகின்றது.

இப்போது எனது கருத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு எழும்பியவர்களில் பெரும்பாலானோர் நில மோசடி, வரிமோசடி மற்றும் அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர்களே ஆவர்.

தற்போது வாதிட்ட புதிய முகங்கள் தொடர்பாக எனக்கு பெரிதாக தெரியாது, ஆகவே பழைய முகங்கள் எழும்பினால் அவர்கள் தொடர்பாக என்னால் பல விடயங்களை தெரியப்படுத்த முடியும்.

தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது புதிய அரசாங்கம் அல்ல. சிறிய மாற்றங்கள் மாத்திரமே இந்த அரசாங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. நான் மேன்மையை அழிக்க விரும்பவில்லை” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!