திரையரங்கு வளாகத்தில் தீயில் கருகிக்கொண்டிருந்த பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை: அதிர்ச்சி சம்பவம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒரு தனியார் தியேட்டர் வளாகத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்ததில் பச்சிளம் குழந்தை நெருப்பில் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனிடையே குழந்தையின் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைக்கப்பட்டதையடுத்து, அது பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது.

இந்த குழந்தை யாருடையது? எதனால் தீயீல் இட்டு கொளுத்தினார்கள்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பச்சிளம் குழந்தையை நெருப்பில் இட்டு எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!