மன்னார் சவுத்பார் ரயில் நிலையம் 14 நாட்களுக்கு மூடப்பட்டது!

மன்னார் சவுத்பார் ரயில் நிலையம் கொரோனா தொற்று அச்சம் காரணமாக முடப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் ரயில் நிலைய ஊழியர்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில் நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா, பெரியகாடு இராணுவ புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்றவர் சனி மாலை மன்னார் செளத்பார் ரயில் நிலையப் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

மன்னார் செளத்பார் ரயில் நிலையத்தைச் சூழவுள்ள பகுதியில் அவர் நடமாடித் திரிந்ததையடுத்து குறித்த ரயில் நிலையம் முற்றிலும் மூடப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து மன்னார் வரும் ரயில்களும் அங்கு தரித்து நிற்காமல் செல்வதற்கான ஏற்பாடுகளை ரயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

அதேநேரம், நேற்று மன்னார் ரயில் நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ரயில் நிலைய ஊழியர்களுக்கு பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

நேற்று மன்னார் பிரதான ரயில் நிலையப் பகுதிகளில் மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!