ஒழிக்கப்படும் மாகாணசபைகள்? மூன்றாகும் ஒன்பது மாகாணங்கள்?

” நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் ருஹுணு, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் உருவாக்கி முன்னெடுத்துச் செல்லலாம் என நிபுணர்கள் குழு வழங்கிய யோசனையை அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.”

இவ்வாறு மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளின் பிரதிநிதிகளை கடந்த 11 ஆம் திகதி கொழும்புக்கு அழைத்து நடந்திய கலந்துரையாடலின்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!