ஒரு பெண்ணை காதலித்த இருவர்: காட்டுப்பகுதியில் அரங்கேறிய கொடூரம்!

திண்டுக்கல் சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் நண்பர் ajith. இவர்கள் இருவரும் சாலையூரில் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இதையடுத்து, இவர்கள் இரண்டு பேரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண்ணை மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தாங்கி கொள்ள முடியாத அஜித் நேற்று மணிகண்டன் மற்றும் மற்றொரு நண்பருடன் சேர்ந்து அருகே உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்தி உள்ளார்.

அப்பொழுது போதை அதிகமான நிலையில் அஜித்தும் மற்றொரு நண்பரும் சேர்ந்து மணிகண்டனை மது அருந்திய பாட்டிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதனால், ரத்தம் படிந்த கரையுடன் வந்த அஜித்தை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து வைத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மணிகண்டனை கொலை செய்ய பயன்படுத்திய உடைந்த மதுபாட்டில்களை கைப்பற்றியதோடு பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்ட அஜித்தை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!