சாணக்கியனுக்கும் தடை உத்தரவு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்கப்படுவதாக கூறி தடையுத்தரவு ஒன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக வெல்லாவெளி பொலிஸாரினால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தினை தவறான முறையில் வழிநடாத்தி இந்த தடையுத்தரவினை பொலிஸார் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!