‘அபராதத்தொகையை செலுத்த தயார்’ – நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்!

அபராத தொகையான 10 கோடி ரூபாயை செலுத்த அனுமதி கோரி பெங்களூர் நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, சுதாகரன், இளவரசிக்கான அபராத தொகையை செலுத்தி விட்டனர். சசிகலாவிற்கு அபராத தொகையை செலுத்த அனுமதி கிடைக்காமல் இருந்ததால், பெங்களூர் சிவில் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் மூலமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓரிரு நாளில் அதற்கான முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!