தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்தால் தமிழரின் இருப்பு கேள்விக்குறியாகும்!

தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என்ற ரெலோவின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஆ.புவனேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு – மல்லாவி, மாந்தை கிழக்கு பிரதேசங்களில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டமைப்பு சார்பாக வன்னியில் ரெலோ கட்சியில் இரண்டு பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்பியமைக்கு நன்றிகள். கடந்த தேர்தலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அது விரைவில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் தேசிய கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கின்ற பொழுது தொடர்ந்தும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும். எனவே, தமிழ் மக்கள் இதில் சற்று விழிப்படைய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!