வியாங்கொடவிலும் ஊடரங்கு!

கம்பஹா மாவட்டத்தில் வியாங்கொட பொலிஸ் பிரிவிலும், நேற்றிரவு தொடக்கம் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டியவில், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்றுக் காலை திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது

இந்தநிலையில், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்றிரவு தொடக்கம், வியாங்கொட பொலிஸ் பிரிவுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!