முடக்கும் அவசியம் இல்லை!

மினுவங்கொட தொற்று நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தேசிய அளவிலான முடக்க நிலையோ, கொழும்பு நகரில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய தேவையோ இல்லை என்று கூறியுள்ளார்.

எந்த நிலைமையை எதிர்கொள்ளவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேவைப்பட்டால், தேசிய அளவிலான ஊரடங்குச் சட்டமோ, பிரதேச மட்டங்களிலான ஊரடங்கு உத்தரவோ பிறப்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!