யாழ். யுவதிகள் 11 பேருக்கு கொரோனா!

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 800இற்கும் அதிகமானோருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 பெண்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் பெரும்பாலும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் புங்குடுதீவுக்குத் திரும்பிய நிலையிலும், ஏனையவர்களுக்கு மினுவங்கொடவிலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!