மீண்டும் மாநகர சபை உறுப்பினராக மணி; மனு வாபஸ்!

யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்காத ஒருவர் யாழ்.மாநகரச சபை உறுப்பினராக அங்கத்துவம் வகிக்க முடியாது என்பதால் வி.மணிவண்ணனை அப்பதவியிலிருந்து நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று (13) மீளப்பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த மனுவுக்கு அமைவான விசாரணையின் அடிப்படையில் மணிவண்ணன் மாநகரசபை அமர்வுகளில் பங்கேற்க கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

குறித்த இடைக்காலத் தடைக்கு ஆட்சேபனை தெரிவித்து வி.மணிவண்ணனால் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மனுதாரர்கள் தமது மனுவை மீளப்பெற்றுள்ளனர்.

இதன்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மணிவண்ணன் மீளவும் மாநகர சபை செல்லச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!