ரிஷாட் தலைமறைவு; இருவர் அதிரடி கைது!

ரிஷாட் பதியுதீன் எம்பியின் கணக்காளர் அழகரத்தினம் மனோரஞ்சன் இன்று (14) சற்றுமுன் கிருலப்பனயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவதை தவிர்க்க உதவிய, அவரது பாதுகாப்பு விவகார பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்களை சிஐடியினர் கைது செய்தனர்.

மேலும் ரிஷாட் பாவித்ததாக கூறப்படும் இரு வாகனங்களும், ஆயுதங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து தலைமறைவாகியுள்ள ரிஷாட்டை தற்போது ஆறு சிஐடி குழுக்கள் தேடி வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!