6 கிராமங்கள் முடக்கி வைப்பு!

கேகாலை மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஈரியகொல்ல, எம்புல்அம்பே, அலவத்த, பிங்ஹேன, பொரளுவ, கிரிவல்லாப்பிடிய ஆகிய 6 கிராமங்களுக்கே இவ்வாறு தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை பகுதியில் பெண் ஒருவருக்கு கொவிட் – 19 தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை ஈரியகொல்ல பகுதியில் வசித்த ஒரு பெண் கலகெடிஹேன ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிகின்றமை தெரியவந்துள்ளது. தொற்றுக்குள்ளான பெண்ணுடன் பலர் நெருங்கி பழகியுள்ள நிலையில் அவ்வாறானவர்களை அடையாளம் காணவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!