தமிழகத்தில் பதுங்கியுள்ள இலங்கை நிழல் உலக தாதாக்கள்!

இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தமிழக பொலிசாருக்கு இன்டர்போல் “ரெட் அலர்ட்” எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையில் தேடப்பட்டு வந்த கட்டகாமினி என்ற தாதா தமிழக கியூ பிராஞ்ச் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே மற்றொரு நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா’ தமிழகத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதேபோல் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் தேடப்பட்டு வரும் இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக தமிழக போலீசாருக்கு இன்டர்போல் “ரெட் அலர்ட்” எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!