புங்குடுதீவு தொற்றாளர் பயணித்த பேருந்து நடத்துனருக்கு தொற்று!

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி கொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவு பெண் பயணித்த இ.போ.சபை பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டுமுறை மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையிலேயே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி, துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த இவர் உட்பட பேருந்தில் பயணித்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு முறை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அவர்களில் நடத்துநர் தவிர்ந்த ஏனையவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!