கொழும்பில் துப்பாக்கிச் சூடு- பாதாள உலக குழு தலைவர் பலி!

கொழும்பு – மாளிகாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷ் உயிரிழந்துள்ளார்.

மாகந்துரே மதுஷ், டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். மாளிகாவத்தையில் உள்ள ஒரு மறைவிடத்துக்கு இவரை அழைத்துச் சென்ற போது, பொலிஸாருக்கும் பாதாள உலக குழுவின் உறுப்பினருக்கும் இடையில் இடம்பெற்றதாகவும், இதன்போது மதுஷ் பலியாகியுள்ளார் என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதன்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இருவரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் போது, 22 கிலோ ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!