தொடர்ந்து எகிறும் மினுவங்கொட தொற்று!

மினுவங்கொட கொரோனா தொற்று கொத்தணியில் நேற்று புதிதாக 127 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தக் கொத்தணியில் உள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை, 2,183 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 42 பேர், ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும், தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய தொடர்புகள் மூலம், 85 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!