மேலும் 57 பேருக்கு தொற்று! – நேற்று மட்டும் 116பேர்.

மேலும் 57 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு நேற்றிரவு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த ஒருவரும் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 56 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் 2508 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதேவேளை நேற்று மட்டும் 166 பேர் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!