நெடுங்கேணியில் மேலும் இருவருக்கு கொரோனா!

வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தெண்ணிலங்கையை சேர்ந்த குறித்த ஒப்பந்த நிறுவனம் வவுனியா வடக்கின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

அங்கு பணியாற்றும் 27 பேருக்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர். பரிசோதனைகள் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மூவருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

குறித்த 27 பேரில் மேலும் இருவரது முடிவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்த நிலையில் இன்று வெளியான முடிவில், இரண்டு ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!