குருநகரில் இருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் – குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு நேற்ற காெரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையையும் சேர்ந்தவர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேலியகொடை மீன் சந்தைக்கு கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவரும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் காெரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் காெரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இரண்டு பேரும் காெரோனா சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படுவதுடன், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தொடர்ந்து சுய தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.

அதேவேளை, வடக்கு மாகாணத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் மற்றையவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திலும் கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!