கொரோனா பரவியமை தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு!

கம்பஹா – மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியமை தொடர்பில் விசாரண நடத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதன்படி இரண்டு வாரத்தில் அது தொடர்பான முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!