ரிஷாட்டின் மறியல் நீடிப்பு; பிணை நிராகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நவம்பர் மாதம் 10ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த பிணை விண்ணப்ப மனுவையும் நீதிவான் தள்ளுபடி செய்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குரிய 22 அரச பேருந்துகளை பயன்படுத்தி அழைத்து வந்தமையின் ஊடாக 9.5 மில்லியன் ரூபாய் அரச பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக ரிஷாட் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!